Welcome

to our home

Serene Rose @ Sulur

About Us,
History & Origin
and More...

Serene Rose is a senior living community located 24 kms away from the Coimbatore airport, this community has a breathtaking view of the Western Ghats. Spread across 5.76 acres, Serene Rose comes with 88 living spaces and 2,636 sq. m of open space. Here, embrace the cool breeze with a vibrant and warm lifestyle.

Facilities
Well Being

Medical Centre with Ambulance, Resident Doctor and Nursing facility, Activity Centre, Gymnasium, STP / RO plant.

Amenitites

Temple, Multi Purpose Hall, Catering Services, House Keeping Services, Deep Cleaning, Garbage Collection Services.

Entertainment

Club House with Lounge, Dining Room, Reading / Card Room, Library, TV Room, Indoor Games, Kitchen, Pantry etc.

Security

Gated Community with 24X7 Security Service, Resident Manager, Stand-by Generator for Common Spaces and Homes, Street Lights.

Accessibility

Elevators, Paved Roads, Intercom, Fiber to Home, Cable TV, Golf Cart for Internal Movement, Wheel Chair Access to Common Spaces.

Environment

Avenue Trees, Well Mainted Gardens, Rain Water Harvesting, Sewage Treatment Plant, Storm Water Drains.

Recent Posts

செரீன் திண்ணை - வாங்க பேசலாம் !!

 செரீன் திண்ணை - வாங்க பேசலாம் !!


Serene Rose, Thinnai Vanga Pesalam வாங்க பேசலாம் is a monthly program organized by Sh. Narayanamoorthy. 

It's reminds of the good old days of chatting with friends and neighbors while sitting on Thinnai, a shaded verandah or sit-out with built-in seating at the entrance to the home. Thinnai used to be the favorite place where the family would often sit to gossip, discuss news, read or even have their afternoon nap.

Yesterday's Program featured : 
  • Mr.Rajamani spoke on Determination. உறுதி 
  • Mr. Ganesan spoke on Ninaivalaigal நினைவலைகள் 
  • Mrs. Rajammal dwelled on Anmigaththil oru thuli ஆன்மிகத்தில் ஒரு துளி 
  • Mr Narayanamoorthy spoke on Ariviyalum Hari iyalum அறிவியலும் ஹரி இயலும்


Please book mark this page for future announcements. Enjoy !!








Serene Rose Sri Selva Vinayagar Samvatsara Celebrations - 2021

 ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் 

முதல் ஆண்டு நிறைவு விழா

Temple committee thanks one and all who had participated physically and virtually in the 1st anniversary function of Lord Selva Vinayagar temple at Serene Rose. Thanks for having made this Samvatsara celebrations, a grand success.

In case, you missed watching the proceedings, please check out the photographs and the full function video below:

With Lord Selva Vinayaga's Aseervadams.

Next one...

Full function video

First Anniversary to Sri Selva Vinayagar @ Serene Rose

 ஓம் ஸ்ரீ செல்வ விநாயகர் துணை


Couldn't believe that it's already a year since Sri Selva Vinayagar came to our Serene Rose.  The fervor and devotion with which Maha Kumbhabhishekam was celebrated is still lingering green in our memories. 

Preparations to celebrate first anniversary of our Sri Selva Vinayagar temple has already commenced.  With the support of the SRRWA, Temple Committee, volunteers, residents and the entire team at Serene Rose, this event is certainly to be an awesome one.  

Some scenes from the Samvatsara preparation :


For the benefit of the residents who are not present at Serene Rose, a live stream on Zoom has been arranged.  Please check with the Temple Committee or RM for details.  

Event would be commencing from 6 AM IST on Wednesday, 08 Sep 2021.  

சம்பத்ஸரா நாளை காலை 6 மணிக்கு துவங்கும்.  எல்லாரையும் பங்கேற்க அழைக்கிறோம் !! 

>> கோவில் கமிட்டி <<


எது சுதந்திரம்?

எது சுதந்திரம்?

திரு. நாராயணமூர்த்தி


15/8/21 அன்று செரின் ரோஸ் அபார்ட்மெண்ட்டில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் என்னுடைய சிற்றுரை

இங்கு கூடியிருக்கும் கற்றறிந்த பெரியோர்களுக்கும் தாய்மார்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். இந்த நன்னாளில் உங்கள் முன் மேடை ஏறிப் பேச என்னைப் பணித்தார்கள். கம்பராமாயணத்தில் அவையடக்கமாக ஒரு பாடல் வரும். திருமால் படுத்திருக்கும் பாற்கடலைப் பார்த்து ஒரு பூனை அதை முழுவதுமாக நக்கிக் குடித்து விடுவேன் என்று அறியாமையால் பெருமை பாராட்டியது போல, தான் இராமாயணத்தை முழுமையாக எழுதத் துணிந்துவிட்டதாக கம்பர் சொல்லியிருப்பார். உங்கள் முன் பேச வந்த எனக்கும் அதே உணர்வு வந்தது. பிழை இருந்தால் சிறுவனான என்னை உங்கள் வீட்டுப் பிள்ளை போல மன்னித்து ஏற்கவும்.

இன்று 75 ஆவது சுதந்திர தினம். வீட்டுக்கு விழா, விரதம், பண்டிகை என்பது போல நாட்டிற்குக் கொண்டாட்ட தினங்களாக சுதந்திர தினமும், குடியரசு தினமும் இருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விழாக்களாக இவை இருக்கின்றன.

விடுதலை பெற்ற பிறகு 74 ஆண்டுகளில் நாம் எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று ஆண்டுத் தணிக்கை தினமாக இன்றைய நாளை நாம் கொள்ளலாம்.

கடமைகளையும், பொறுப்புகளையும் முடித்து சந்ததியினரிடம் அப்பணிகளைக் கொடுத்தபின் இந்த செரின் ரோஸ் மூத்த குடிமக்கள் சமூகத்தில் நாம் அமைதியான ஆனந்த வாழ்விற்குள் நுழைந்திருக்கிறோம். எனவே நம்முடைய பார்வையில் சுதந்திரம் என்றால் என்ன என்று சிந்திக்கலாம்.

சுதந்திரம் என்பதன் முற்றான முடிவு என்பதனை "சுகமான வாழ்வு அடைதல்" என்று கொள்ளலாம்.

எது சுகம்? சேர்த்துக் கொள்வதா? இல்லை விட்டு விலகுவதா? என்ற கேள்விகளுக்கு விடைகள் இரண்டுமேதான் என்று அனுபவித்து, வாழ்ந்து, வெற்றி பெற்ற உங்களுக்கு நன்றாக தெரியும்.

எதையெல்லாம் அவசியத் தேவை;அவை இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பெருந்தேடலுடன் தொடங்கிய நாம் கல்வி, வித்யை, தொழில், பணி, இல்லறம், நன்மக்கட்பேறு, நல்ல வீடு, வாசல், சொத்து என்று  இவையனைத்தையும் பெற்று விட்டோம். இவையனைத்தையும் அடைந்த பிறகு திரும்பிப் பார்த்தால் நாம் கடந்து வந்த பாதையையும் சாதனைகளையும் பார்த்து பெருமையையும் அடைந்து விட்டோம். இந்த சாதனைகளை அடைவதற்குள் நமக்கு எத்தனை முயற்சி, எத்தனை இழப்பு, எத்தனை கோபம், எத்தனை ஏமாற்றம், எத்தனை வருத்தம், எத்தனை அவமானம், எத்தனை சாகசம்  எல்லாம் வந்து போயின!

இப்போது அடுத்த நிலை வாழ்வுக்குள் நுழைந்த நமக்கு நம் சாதனைகளே சுமைகளாகி பாரமாக அழுத்துவதை உணர்கிறோமா? பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து கட்டிய பெரிய வீடு இப்போது வேண்டியதில்லை. அன்புடன் வளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் கால்களில் சுயமாக நிற்கும்போது பெருமையுடன் பார்த்து விலகுகிறோம். அதிகாரத்துடன் வலம் வந்த பணியிடத்தில் வேறு புதிய ஆட்கள் வந்தாகிவிட்டது.

இப்போதைய சுகமும் அதற்கான வழிகளும் இவைகள்தான்.

அன்பான நண்பர்கள், கூப்பிட்டவுடன் உதவிக்கு வரும் பணியாட்கள், நல்ல சத்தான உணவு, சுத்தமான சூழல், தேவையான மருத்துவ உதவி, ஆரோக்கியமான உடம்பு, விட்டுக் கொடுக்கும் சுபாவம், பொறுமை மற்றும் அமைதி, இவைகள்தான்.

மலையில் தோன்றும் ஆறு ஓடையாக நடந்து கிளை நதிகளை இணைத்துக் கொண்டு சிகரங்களில் இருந்து ஆர்ப்பரித்து அருவியாக இறங்கி, வழியில் கண்டவற்றை ஆர்ப்பாட்டமாக அடித்துக் கொண்டு பாசனத்திற்காகவும், குடிநீருக்குமாகப் பயன்பட்டு, கடலில் சங்கமிக்கும்போது அமைதியாக நகர்ந்து செல்லும். இப்போது ஆர்ப்பரித்து அருவியாய் கொட்ட மலைமுகடுகளும் இல்லை; பாசனம் செய்ய வயல்வெளிகளும் இல்லை. அதனால் அதற்கு அமைதியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நாமும் அவ்வாறே.

இரண்டாம் பகுதி வாழ்வில் நுழைந்திருக்கும் நமக்கு என்னென்ன தேவை என்று இராமலிங்க அடிகளார் பட்டியல் இடுகிறார்.

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்ததொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
ஷண்முகத் தெய்வ மணியே"

சுதந்திரத் திருநாளைத் தமிழில் விடுதலைத் திருநாள் என்றும் உரிமைத் திருநாள் என்றும் இரு விதத்தில் கூறுவர்.

எனவே நம்முடைய சுமையான பாரங்களில் இருந்து விடுதலை ஆவோம்; நம்முடைய அமைதியான வாழ்விற்கான உரிமைகளைத் தேடிப் பெறுவோம்.

ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்!!

நன்றி; வணக்கம்.

Few moments from the 75th Independence Day celebrations at Serene Rose.  

Let's enjoy and respect our freedom.  Jai Hind !!



Kutti Kathai - அன்பு

 அன்பு

திரு. நாராயணமூர்த்தி

அது  நடந்தது1971 ஆம் ஆண்டு. நான் திருச்சி தேசியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இருந்தேன்.(படித்துக் கொண்டிருந்தேன் என்று எழுத கூச்சமாக இருக்கிறது. அவ்வளவாக நான் பொய் சொல்வதில்லை).

என் நண்பர்களுடன் பாலக்கரை பிரபாத் டாக்கீஸில் சிவாஜி நடித்த"சிவந்த மண்" படத்திற்கு டிக்கெட் வாங்கக் கூண்டு வரிசையில் முண்டியடித்துக் கொண்டிருந்தோம். நல்ல மழை. கூரை அரதப்பழசு. வெளியே இருப்பதைவிட உள்ளே அதிக மழை. அத்தனையும் எங்கள் தலையில். உள்ளே சென்று சட்டையைக் கழற்றிப் பிழிந்து தலையை துவட்டி கொண்டு படத்தில் மூழ்கினோம்.

மறுநாள் காலையில் RTC லாட்ஜ் இட்லி, தோசை சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது. 

எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் எங்களின் குடும்ப நண்பர். அவர் பொன்மலைப்பட்டியில் வசித்து வந்தார். அவருக்குப் போதுமான பொருட்செல்வம் இருந்ததோ என்று தெரியாது. ஆனால் மக்கட்செல்வமும் அறிவுச் செல்வமும் ஏராளம். இரக்க குணமும் அன்பும் அவரது குடும்பச் சொத்து. 

என் நண்பன் என்னை அவர் வீட்டில் விட்டு விட்டான். ஒன்பதாவது குழந்தையாக எனக்கும் அங்கே இடம் கிடைத்தது. நான் படுத்த படுக்கையாகி விட்டேன். அந்த வீட்டில் குழந்தைகள் எல்லோரும் பள்ளிக்குச் செல்லும் வயதினர். அத்தனை பேருக்கும் காலை உணவு மதிய சாப்பாடு செய்து வெளியே அனுப்புவதற்குள் அந்த அம்மாவுக்கு பெரும் பாடு. இதில் டைபாய்டு காய்ச்சலில் நான் வேறு. என் நிலைமை தெரிந்து என் அம்மாவும் அங்கே வந்து விட்டார். 

சார் கம்பன் விழா நிகழ்ச்சிகளுக்காக பல ஊர்களுக்கும் செல்வார். மூன்று விதமான பெட்டிகள் ஆயத்தமாக இருக்கும். கல்லூரியில் இருந்து வந்தவுடன் வெளியூர் செல்லும் அவசரத்துடனேயே வருவார். எந்த ஊர், எத்தனை நாள், ஒன்றும் கேட்கக்கூடாது. அவர் சிறிய பெட்டியைத் தூக்கினால் ஒரு நாள் என்றும்,அடுத்ததைத் தூக்கினால் இரண்டு நாட்கள் என்ற முறையில் அந்த அம்மா புரிந்து கொள்ள வேண்டும். போகும் போது அவரிடம் செலவுக்கு ரூபாய் கொடுத்து விடுவார். வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது, ஆசிரியர் இல்லாத ஐந்தாம் வகுப்பறையில் வரும் இரைச்சல் இருக்கும். 

ஒரு வாரத்தில் எனக்கு சற்றே சரியாகி இருந்தது. வெளியில் இருந்து வந்த சார் ஒரு பெரிய ஆப்பிளை என்னிடம் தந்து" இது நாராயணமூர்த்திக்கு மட்டுமே" என்று சொல்லி விட்டுப் போனார். காய்ச்சலில் இருந்து அப்போதுதான் விடுபட்டிருந்த எனக்கு நல்ல பசி. போர்வையை தலையோடு போர்த்திக்கொண்டு ஆப்பிளைக் கடிக்க ஆரம்பித்தேன். பாதியிலேயே வயிறு நிரம்பியது. சிரமப்பட்டு ஒரு வழியாக முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்.  சற்று நேரத்தில் அவர் மனைவி "நாராயணமூர்த்தி, அந்த ஆப்பிளைக் கொடு. நறுக்கித் தருகிறேன்" என்றார்கள். காரைக்கால் அம்மையார் போல நான் திரு திரு என்று முழித்து " மாமா எனக்கே எனக்கு, என்று சொன்னதால் நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்" என்றேன். "அடப்பயலே, பெரியவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.  எட்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டாமோ? இப்படியா யாருக்கும் தராமல் இருப்பது" என்று இயல்பாகச் சொன்னார்கள்.

இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணம் நிஜமாகவே அப்போதுதான் புரிந்தது.

Story Time - சரவணா தியேட்டர்

 சரவணா தியேட்டர்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : South India Movie Theater

அறுபதுகளில் கோபியில் இரண்டே சினிமா கொட்டாய்கள் இருந்தன. நிஜமாலுமே கொட்டாய்கள்தான். தகரம் வேய்ந்த கூரை, முன் பாதி இடம் தரை டிக்கெட்டுகளுக்கு, பிறகு பெஞ்சு, அப்புறமாக இரண்டு வரிசைகளில் சேர்கள். கொட்டாயின் நடுவில் தடுப்பு இருக்கும். இடப்புறம் ஆண்களுக்கும் மறுபுறம் பெண்களுக்குமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கொட்டாய்களில் ஒன்று டிப்டாப்; மற்றது நாகையா. அவ்வப்போது ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீஸ் வந்து ஒரு ஆறு மாதங்கள் இருக்கும். இந்த முதலாளிகளுக்கு சுய கட்டுப்பாடு ஒன்று உண்டு.  ஒரு சினிமா வந்தால் பதினைந்து போஸ்டர்கள் மட்டும் அத்துடன் சேர்த்து வாங்குவார்கள். நகருக்குள் எட்டு முக்கிய இடங்களிலும், சுற்றுவட்ட கிராமங்களில் ஊருக்கு ஒன்றாக அனுமதி பெற்று ஒட்டுவார்கள். இஷ்டப்படி கண்ட இடங்களில் ஒட்டுவதில்லை. கச்சேரி மேடு, பெரியார் மைதானம், பஸ்ஸ்டாண்டு, பாரியூர் செல்லும் வழித்தொடக்கம், பெருமாள் கோயில் முக்கு இத்யாதி இடங்கள். என்ன சினிமா எதில் வந்திருக்கிறது என்று நாம்தான் அந்த இடத்திற்குப் போய் பார்க்க வேண்டும்.

அதை விட விசேஷம் டிப்டாப்பில் எப்பொழுதும் எம்ஜிஆர் படங்களும் நாகையாவில் சிவாஜி படங்களுமாக போடுவார்கள். ஆனால் என்ன, கோயம்புத்தூரில் ரிலீஸான படங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்குக் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். இருந்தாலும் அததற்குரிய மரியாதையோடு வரும்.

மற்றபடி ஜெய்சங்கர், ஜெமினி, ரவிச்சந்திரன்,அசோகன் போன்ற அடுத்த நிலை கதாநாயகர்கள் படமெல்லாம் இந்த இருவர் படங்களும் இல்லாத நேரங்களில் போடுவார்கள்.

கொட்டாய் வாசல்கள் கோலாகலமாக இருக்கும். வண்டிக்கடை நடராஜமாமா கலர் கலராய் இருக்கும் கண்ணாடிகள் ஒட்டப்பட்ட  தள்ளுவண்டியில் விதவிதமான பட்சணங்கள் செய்துகொண்டு விற்பனைக்கு வருவார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் அவைகள் கண்ணைக் கவரும். இரண்டாம் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அனேகமாக எல்லாம் விற்றுத் தீர்ந்து விடும். தரையில் அமர்ந்து வை ராஜா வை விளையாட்டுகள், அந்தந்தப் படங்களின் பாட்டுப்புத்தகங்கள், நாவல்கள், பொது இடங்களில் படிக்கக்கூடாத புத்தகங்கள் விற்பனை, மோடி மஸ்தான் ஷோக்கள் இப்படியாக அமர்க்களமாக இருக்கும்.

உள்ளே இன்னும் விசேஷம்தான். ஃபிலிம்டிவிஷன் தயாரிப்பில் வந்த நியூஸ் படங்களை அப்பொழுது எல்லா தியேட்டர்களிலும் போட்டே ஆகவேண்டும். எங்களுக்கும் அதெல்லாம் அவசியம் வேண்டும். அதில்தான் எங்களின் பொது அறிவே வளரும். பீகாரில் வறட்சி,குஜராத்தில் வெள்ளம், சீனப் பிரதமர் இந்தியா வருகை, இத்தியாதி. மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் படம் பார்க்க வேண்டும். ஒரு ரீல் முடிந்தவுடன் பாகம் 1 , பாகம் 2 என்றெல்லாம் வரும். கரண்ட் கட் ஆனாலும் பொறுமையாக இருப்போம். கரண்ட் வரும் வரை டீ,காபி, முறுக்கு, மிக்சர் வியாபாரம் உள்ளேயே களைகட்டும். என்ன.. எங்கு பார்த்தாலும் பீடியை ஊதித் தள்ளுவார்கள். ஒரே புகை மண்டலமாக இருக்கும். "புகை பிடிக்காதீர்கள்" ஸ்லைடு பெரும் புகைக்கு நடுவே மங்கலாகத் தெரியும். எப்பொழுதும் மாலைக் காட்சி நன்றாக இருக்கும். சனி, ஞாயிறுகளில் மட்டும் மேட்னி ஷோ போடுவார்கள். (பள்ளிக்கூடத்தை யாரும் கட் அடித்து விட்டு வரக்கூடாது). தெரியாமல் சனி ஞாயிறுகளில் மேட்னி ஷோ போனால் பானையில் இட்லி வேகுவது போல் எல்லோரும் வியர்வைக்குளத்தில் மூழ்கி எழுந்து வரவேண்டும். இதில் புகை மண்டலத்தில் புகுந்து வெளிவந்தால் நமக்கே நம் மீது வீசும் வாசம் தாங்க முடியாது. வீட்டுக்கு வந்தால் ரேழியிலேயே உடைமாற்றி உள்ளே வரவேண்டும். வீட்டுக்குத் தெரியாமல் சினிமா பார்க்கப் போனால் மோந்து பார்த்தே கண்டு பிடித்து விடுவார்கள். மின் விசிறிகள் இரண்டு பக்கமும் இருக்கும். இருந்தாலும் அவை கீழ்நோக்கி சுழலாமல் எதிர்ச் சுவரில் இருக்கும் விசிறியைப் பார்த்துதான் வீசும். 

65 ஆம் ஆண்டு ஊர் எல்லையில் இருக்கும் வரவேற்பு வளைவை அடுத்து சாந்தி திரையரங்கம் வந்தது. ஓரளவுக்கு அது நாகரீகமாக இருந்தது. தரை டிக்கெட் ஒழிக்கப்பட்டு அங்கும் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.  இருந்தாலும் மாலைக் காட்சி பார்த்து வீட்டுக்கு வர இரவு நெடுநேரம் ஆகிவிடும்.

66 ஆம் ஆண்டு வந்தது எங்களின் பிரியமான சரவணா தியேட்டர். எல்லா வகுப்புகளுக்கும் சேர்கள். 

திரையின் இரண்டு புறமும் கூரையை முட்டும் அளவுக்கு அழகான பூ டிஸைன்கள். வண்ண வண்ண ஒளிக்கதிர்கள் அவற்றின் இதழ்களில் இருந்து வரும். பல்புகள் தெரியாது.

வெண்திரையை மறைத்தால் போல வண்ணத்திரை. ஒவ்வொரு காட்சிக்கும் அந்தத் திரை மேலே தூக்கப்படும்போது திரையின் அடிக்குஞ்சலங்களில் பொருத்தப்பட்ட வண்ண விளக்குகள் திரையுடன் மேலே போகும். அது சுவர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை நமக்குக் கொடுக்கும்.

பாகம் பாகமாக பார்த்த படங்களை எல்லாம் தொடர்ச்சியாகப் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் எதிரொலி யின் அளவு தெரிவதற்காக முதல் ஒரு மாதம் இலவசமாக "எங்க வீட்டுப் பிள்ளை" படம் போட்டார்கள். ஒரு காட்சி விடாமல் எல்லா ஷோவும் பார்த்தோம். 

ஞாயிற்றுக்கிழமைகளில் காலைக் காட்சிகளாக ஆங்கிலப் படம் போடுவார்கள். ஒரு ஆங்கில சினிமா ரசிகர் கிளப் உண்டாக்கி, ஆண்டுச் சந்தாவாக தொகை ஒன்றை கட்டணமாகப் பெற்று, சென்னை சங்கீத சபாக்கள் போல சினிமா சபா ஏற்படுத்தியிருந்தார்கள். சபா உறுப்பினர்களை ஆங்கில சினிமாக்களுக்கு அனுமதித்த பிறகு இடமிருந்தால் பொது மக்களும் அனுமதிக்கப் படுவார்கள்.

இது எல்லாவற்றையும் விட மற்றும் ஒரு விசேஷம் சரவணா தியேட்டருக்கு உண்டு. இடைவேளை முடிந்தபின் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் போட இருக்கும் ஆங்கிலப் பட ட்ரெய்லர் காட்டுவார்கள். அது சினிமாஸ்கோப் படமாக இருந்தால் வெண்திரை  அதற்கேற்ற வகையில் தானே விரிந்து கொள்ளும். பிறகு நம்ம ஊர் படம் போடும் போது அதற்கேற்றாற்போல் தானே சுருங்கிக் கொள்ளும். எங்களுக்கெல்லாம் அது அற்புதமாகவும் அதிசயமாகவும் தோன்றும்.

பல ஆண்டுகள் கழித்து என் அறையில் இருந்து நான் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது குமாரசாமி ஆசிரியர் (அவரும் கோபிக்காரர்தான்) பதைபதைக்க வந்து"சார்,சரவணா தியேட்டரை இடித்துத் தரைமட்டம் ஆக்கிட்டாங்க" என்றார்.

என் அம்மா இறந்தபோது ஏற்பட்ட துக்கம் அன்று மீண்டும் வந்தது.

Contact Us

Address

No 323/1B, Opp Kendriya Vidyalaya, Near Sulur Airforce Station, Kangeyampalayam, Trichy Road, Sulur, Tamil Nadu 641 401, India

Phone

+91 422 428 5555