Welcome

to our home

Serene Rose @ Sulur

About Us,
History & Origin
and More...

Serene Rose is a senior living community located 24 kms away from the Coimbatore airport, this community has a breathtaking view of the Western Ghats. Spread across 5.76 acres, Serene Rose comes with 88 living spaces and 2,636 sq. m of open space. Here, embrace the cool breeze with a vibrant and warm lifestyle.

Facilities
Well Being

Medical Centre with Ambulance, Resident Doctor and Nursing facility, Activity Centre, Gymnasium, STP / RO plant.

Amenitites

Temple, Multi Purpose Hall, Catering Services, House Keeping Services, Deep Cleaning, Garbage Collection Services.

Entertainment

Club House with Lounge, Dining Room, Reading / Card Room, Library, TV Room, Indoor Games, Kitchen, Pantry etc.

Security

Gated Community with 24X7 Security Service, Resident Manager, Stand-by Generator for Common Spaces and Homes, Street Lights.

Accessibility

Elevators, Paved Roads, Intercom, Fiber to Home, Cable TV, Golf Cart for Internal Movement, Wheel Chair Access to Common Spaces.

Environment

Avenue Trees, Well Mainted Gardens, Rain Water Harvesting, Sewage Treatment Plant, Storm Water Drains.

Recent Posts
Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Kutti Kathai - அன்பு

 அன்பு

திரு. நாராயணமூர்த்தி

அது  நடந்தது1971 ஆம் ஆண்டு. நான் திருச்சி தேசியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இருந்தேன்.(படித்துக் கொண்டிருந்தேன் என்று எழுத கூச்சமாக இருக்கிறது. அவ்வளவாக நான் பொய் சொல்வதில்லை).

என் நண்பர்களுடன் பாலக்கரை பிரபாத் டாக்கீஸில் சிவாஜி நடித்த"சிவந்த மண்" படத்திற்கு டிக்கெட் வாங்கக் கூண்டு வரிசையில் முண்டியடித்துக் கொண்டிருந்தோம். நல்ல மழை. கூரை அரதப்பழசு. வெளியே இருப்பதைவிட உள்ளே அதிக மழை. அத்தனையும் எங்கள் தலையில். உள்ளே சென்று சட்டையைக் கழற்றிப் பிழிந்து தலையை துவட்டி கொண்டு படத்தில் மூழ்கினோம்.

மறுநாள் காலையில் RTC லாட்ஜ் இட்லி, தோசை சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது. 

எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் எங்களின் குடும்ப நண்பர். அவர் பொன்மலைப்பட்டியில் வசித்து வந்தார். அவருக்குப் போதுமான பொருட்செல்வம் இருந்ததோ என்று தெரியாது. ஆனால் மக்கட்செல்வமும் அறிவுச் செல்வமும் ஏராளம். இரக்க குணமும் அன்பும் அவரது குடும்பச் சொத்து. 

என் நண்பன் என்னை அவர் வீட்டில் விட்டு விட்டான். ஒன்பதாவது குழந்தையாக எனக்கும் அங்கே இடம் கிடைத்தது. நான் படுத்த படுக்கையாகி விட்டேன். அந்த வீட்டில் குழந்தைகள் எல்லோரும் பள்ளிக்குச் செல்லும் வயதினர். அத்தனை பேருக்கும் காலை உணவு மதிய சாப்பாடு செய்து வெளியே அனுப்புவதற்குள் அந்த அம்மாவுக்கு பெரும் பாடு. இதில் டைபாய்டு காய்ச்சலில் நான் வேறு. என் நிலைமை தெரிந்து என் அம்மாவும் அங்கே வந்து விட்டார். 

சார் கம்பன் விழா நிகழ்ச்சிகளுக்காக பல ஊர்களுக்கும் செல்வார். மூன்று விதமான பெட்டிகள் ஆயத்தமாக இருக்கும். கல்லூரியில் இருந்து வந்தவுடன் வெளியூர் செல்லும் அவசரத்துடனேயே வருவார். எந்த ஊர், எத்தனை நாள், ஒன்றும் கேட்கக்கூடாது. அவர் சிறிய பெட்டியைத் தூக்கினால் ஒரு நாள் என்றும்,அடுத்ததைத் தூக்கினால் இரண்டு நாட்கள் என்ற முறையில் அந்த அம்மா புரிந்து கொள்ள வேண்டும். போகும் போது அவரிடம் செலவுக்கு ரூபாய் கொடுத்து விடுவார். வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது, ஆசிரியர் இல்லாத ஐந்தாம் வகுப்பறையில் வரும் இரைச்சல் இருக்கும். 

ஒரு வாரத்தில் எனக்கு சற்றே சரியாகி இருந்தது. வெளியில் இருந்து வந்த சார் ஒரு பெரிய ஆப்பிளை என்னிடம் தந்து" இது நாராயணமூர்த்திக்கு மட்டுமே" என்று சொல்லி விட்டுப் போனார். காய்ச்சலில் இருந்து அப்போதுதான் விடுபட்டிருந்த எனக்கு நல்ல பசி. போர்வையை தலையோடு போர்த்திக்கொண்டு ஆப்பிளைக் கடிக்க ஆரம்பித்தேன். பாதியிலேயே வயிறு நிரம்பியது. சிரமப்பட்டு ஒரு வழியாக முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்.  சற்று நேரத்தில் அவர் மனைவி "நாராயணமூர்த்தி, அந்த ஆப்பிளைக் கொடு. நறுக்கித் தருகிறேன்" என்றார்கள். காரைக்கால் அம்மையார் போல நான் திரு திரு என்று முழித்து " மாமா எனக்கே எனக்கு, என்று சொன்னதால் நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்" என்றேன். "அடப்பயலே, பெரியவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.  எட்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டாமோ? இப்படியா யாருக்கும் தராமல் இருப்பது" என்று இயல்பாகச் சொன்னார்கள்.

இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணம் நிஜமாகவே அப்போதுதான் புரிந்தது.

Story Time - சரவணா தியேட்டர்

 சரவணா தியேட்டர்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : South India Movie Theater

அறுபதுகளில் கோபியில் இரண்டே சினிமா கொட்டாய்கள் இருந்தன. நிஜமாலுமே கொட்டாய்கள்தான். தகரம் வேய்ந்த கூரை, முன் பாதி இடம் தரை டிக்கெட்டுகளுக்கு, பிறகு பெஞ்சு, அப்புறமாக இரண்டு வரிசைகளில் சேர்கள். கொட்டாயின் நடுவில் தடுப்பு இருக்கும். இடப்புறம் ஆண்களுக்கும் மறுபுறம் பெண்களுக்குமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கொட்டாய்களில் ஒன்று டிப்டாப்; மற்றது நாகையா. அவ்வப்போது ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீஸ் வந்து ஒரு ஆறு மாதங்கள் இருக்கும். இந்த முதலாளிகளுக்கு சுய கட்டுப்பாடு ஒன்று உண்டு.  ஒரு சினிமா வந்தால் பதினைந்து போஸ்டர்கள் மட்டும் அத்துடன் சேர்த்து வாங்குவார்கள். நகருக்குள் எட்டு முக்கிய இடங்களிலும், சுற்றுவட்ட கிராமங்களில் ஊருக்கு ஒன்றாக அனுமதி பெற்று ஒட்டுவார்கள். இஷ்டப்படி கண்ட இடங்களில் ஒட்டுவதில்லை. கச்சேரி மேடு, பெரியார் மைதானம், பஸ்ஸ்டாண்டு, பாரியூர் செல்லும் வழித்தொடக்கம், பெருமாள் கோயில் முக்கு இத்யாதி இடங்கள். என்ன சினிமா எதில் வந்திருக்கிறது என்று நாம்தான் அந்த இடத்திற்குப் போய் பார்க்க வேண்டும்.

அதை விட விசேஷம் டிப்டாப்பில் எப்பொழுதும் எம்ஜிஆர் படங்களும் நாகையாவில் சிவாஜி படங்களுமாக போடுவார்கள். ஆனால் என்ன, கோயம்புத்தூரில் ரிலீஸான படங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்குக் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். இருந்தாலும் அததற்குரிய மரியாதையோடு வரும்.

மற்றபடி ஜெய்சங்கர், ஜெமினி, ரவிச்சந்திரன்,அசோகன் போன்ற அடுத்த நிலை கதாநாயகர்கள் படமெல்லாம் இந்த இருவர் படங்களும் இல்லாத நேரங்களில் போடுவார்கள்.

கொட்டாய் வாசல்கள் கோலாகலமாக இருக்கும். வண்டிக்கடை நடராஜமாமா கலர் கலராய் இருக்கும் கண்ணாடிகள் ஒட்டப்பட்ட  தள்ளுவண்டியில் விதவிதமான பட்சணங்கள் செய்துகொண்டு விற்பனைக்கு வருவார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் அவைகள் கண்ணைக் கவரும். இரண்டாம் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அனேகமாக எல்லாம் விற்றுத் தீர்ந்து விடும். தரையில் அமர்ந்து வை ராஜா வை விளையாட்டுகள், அந்தந்தப் படங்களின் பாட்டுப்புத்தகங்கள், நாவல்கள், பொது இடங்களில் படிக்கக்கூடாத புத்தகங்கள் விற்பனை, மோடி மஸ்தான் ஷோக்கள் இப்படியாக அமர்க்களமாக இருக்கும்.

உள்ளே இன்னும் விசேஷம்தான். ஃபிலிம்டிவிஷன் தயாரிப்பில் வந்த நியூஸ் படங்களை அப்பொழுது எல்லா தியேட்டர்களிலும் போட்டே ஆகவேண்டும். எங்களுக்கும் அதெல்லாம் அவசியம் வேண்டும். அதில்தான் எங்களின் பொது அறிவே வளரும். பீகாரில் வறட்சி,குஜராத்தில் வெள்ளம், சீனப் பிரதமர் இந்தியா வருகை, இத்தியாதி. மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் படம் பார்க்க வேண்டும். ஒரு ரீல் முடிந்தவுடன் பாகம் 1 , பாகம் 2 என்றெல்லாம் வரும். கரண்ட் கட் ஆனாலும் பொறுமையாக இருப்போம். கரண்ட் வரும் வரை டீ,காபி, முறுக்கு, மிக்சர் வியாபாரம் உள்ளேயே களைகட்டும். என்ன.. எங்கு பார்த்தாலும் பீடியை ஊதித் தள்ளுவார்கள். ஒரே புகை மண்டலமாக இருக்கும். "புகை பிடிக்காதீர்கள்" ஸ்லைடு பெரும் புகைக்கு நடுவே மங்கலாகத் தெரியும். எப்பொழுதும் மாலைக் காட்சி நன்றாக இருக்கும். சனி, ஞாயிறுகளில் மட்டும் மேட்னி ஷோ போடுவார்கள். (பள்ளிக்கூடத்தை யாரும் கட் அடித்து விட்டு வரக்கூடாது). தெரியாமல் சனி ஞாயிறுகளில் மேட்னி ஷோ போனால் பானையில் இட்லி வேகுவது போல் எல்லோரும் வியர்வைக்குளத்தில் மூழ்கி எழுந்து வரவேண்டும். இதில் புகை மண்டலத்தில் புகுந்து வெளிவந்தால் நமக்கே நம் மீது வீசும் வாசம் தாங்க முடியாது. வீட்டுக்கு வந்தால் ரேழியிலேயே உடைமாற்றி உள்ளே வரவேண்டும். வீட்டுக்குத் தெரியாமல் சினிமா பார்க்கப் போனால் மோந்து பார்த்தே கண்டு பிடித்து விடுவார்கள். மின் விசிறிகள் இரண்டு பக்கமும் இருக்கும். இருந்தாலும் அவை கீழ்நோக்கி சுழலாமல் எதிர்ச் சுவரில் இருக்கும் விசிறியைப் பார்த்துதான் வீசும். 

65 ஆம் ஆண்டு ஊர் எல்லையில் இருக்கும் வரவேற்பு வளைவை அடுத்து சாந்தி திரையரங்கம் வந்தது. ஓரளவுக்கு அது நாகரீகமாக இருந்தது. தரை டிக்கெட் ஒழிக்கப்பட்டு அங்கும் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.  இருந்தாலும் மாலைக் காட்சி பார்த்து வீட்டுக்கு வர இரவு நெடுநேரம் ஆகிவிடும்.

66 ஆம் ஆண்டு வந்தது எங்களின் பிரியமான சரவணா தியேட்டர். எல்லா வகுப்புகளுக்கும் சேர்கள். 

திரையின் இரண்டு புறமும் கூரையை முட்டும் அளவுக்கு அழகான பூ டிஸைன்கள். வண்ண வண்ண ஒளிக்கதிர்கள் அவற்றின் இதழ்களில் இருந்து வரும். பல்புகள் தெரியாது.

வெண்திரையை மறைத்தால் போல வண்ணத்திரை. ஒவ்வொரு காட்சிக்கும் அந்தத் திரை மேலே தூக்கப்படும்போது திரையின் அடிக்குஞ்சலங்களில் பொருத்தப்பட்ட வண்ண விளக்குகள் திரையுடன் மேலே போகும். அது சுவர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை நமக்குக் கொடுக்கும்.

பாகம் பாகமாக பார்த்த படங்களை எல்லாம் தொடர்ச்சியாகப் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் எதிரொலி யின் அளவு தெரிவதற்காக முதல் ஒரு மாதம் இலவசமாக "எங்க வீட்டுப் பிள்ளை" படம் போட்டார்கள். ஒரு காட்சி விடாமல் எல்லா ஷோவும் பார்த்தோம். 

ஞாயிற்றுக்கிழமைகளில் காலைக் காட்சிகளாக ஆங்கிலப் படம் போடுவார்கள். ஒரு ஆங்கில சினிமா ரசிகர் கிளப் உண்டாக்கி, ஆண்டுச் சந்தாவாக தொகை ஒன்றை கட்டணமாகப் பெற்று, சென்னை சங்கீத சபாக்கள் போல சினிமா சபா ஏற்படுத்தியிருந்தார்கள். சபா உறுப்பினர்களை ஆங்கில சினிமாக்களுக்கு அனுமதித்த பிறகு இடமிருந்தால் பொது மக்களும் அனுமதிக்கப் படுவார்கள்.

இது எல்லாவற்றையும் விட மற்றும் ஒரு விசேஷம் சரவணா தியேட்டருக்கு உண்டு. இடைவேளை முடிந்தபின் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் போட இருக்கும் ஆங்கிலப் பட ட்ரெய்லர் காட்டுவார்கள். அது சினிமாஸ்கோப் படமாக இருந்தால் வெண்திரை  அதற்கேற்ற வகையில் தானே விரிந்து கொள்ளும். பிறகு நம்ம ஊர் படம் போடும் போது அதற்கேற்றாற்போல் தானே சுருங்கிக் கொள்ளும். எங்களுக்கெல்லாம் அது அற்புதமாகவும் அதிசயமாகவும் தோன்றும்.

பல ஆண்டுகள் கழித்து என் அறையில் இருந்து நான் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது குமாரசாமி ஆசிரியர் (அவரும் கோபிக்காரர்தான்) பதைபதைக்க வந்து"சார்,சரவணா தியேட்டரை இடித்துத் தரைமட்டம் ஆக்கிட்டாங்க" என்றார்.

என் அம்மா இறந்தபோது ஏற்பட்ட துக்கம் அன்று மீண்டும் வந்தது.

Story Time - பேட்டும் பாலும்

 பேட்டும் பாலும்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : DNA

அப்பொழுதெல்லாம் கோபி வைரவிழா உயர் நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதியில் உடைந்த விளையாட்டுப் பொருள்களை ஏலம் விடுவார்கள். ஒண்ணார்ரூபா கொடுத்து கைப்பிடி உடைந்துபோன கிரிக்கெட் பேட் ஒன்றை எங்கள் டீமுக்காக வாங்கினோம்.

அதை எடுத்துக்கொண்டு கட்டைமாட்டு வண்டி தயாரிக்கும் ஆசாரி ஒருவரிடம் கெஞ்சி மூங்கில் ஒன்றை V வடிவத்தில் சீவி அதை அந்த பேட்டுக்குள் பசை போட்டு சொருகி ஆடாமல் இருக்க சுள்ளாணிகளை அடித்து ஒரு முழு பேட் செய்தோம். 

அதற்கு மேல் ட்வைன் நூலை உருகிய வஜ்ஜிரத்தில் நனைத்து நெருக்கி நெருக்கிச் சுற்றினோம். சூட்டுடன் சுற்றச் சுற்ற கைகளில் கொப்புளங்கள் வந்தாலும், வஜ்ஜிர நாற்றம்  மூக்கைத் துளைத்தாலும் பொருட்படுத்தாமல் எடுத்துக் கொண்ட காரியத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு மூன்று நான்கு அடுக்குகள் மேலே மேலே சுற்றி உறுதி ஏற்றினோம். மூன்று நாட்கள் அதையே பார்த்துக் கொண்டு வந்தோம். பசையை நன்கு காயவிட்டோம்.

பேட் இப்போது ரெடி. கிரௌண்டில் மிகவும் சந்தோஷமாகவும், பெருமிதத்துடன் கார்க் பாலை முதலில் வேகமாக அடித்தவுடன் முழங்கை மற்றும் தோள்களில் விர்ரென்று ஷாக் அடித்தது. நிஜமான பேட்டில் கைப்பிடி அதிர்ச்சி தாங்கும் வகையில் ஏழெட்டு மரச்சிறாய்கள் ஆலையில் பசை போட்டு ஒட்டப்பட்டு, அதன் மேல் ரப்பர் உறை போட்டு வருவதால் அதற்கு லேசாக வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும். பந்தை எவ்வளவு வேகமாக அடித்தாலும் ஷாக் வராது. மொத்தையான நம்ம ஊர் மூங்கிலுக்கு அப்படியான நாசூக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. சபை கூடி இந்த பிரச்சினைக்குத் தீர்வு ஆலோசித்தோம். சைக்கிள் கடை அண்ணனிடம் குழாயடித்து ஒரு பழைய சைக்கிள் டியூப் வாங்கி அதனை அந்த மூங்கில் கைப்பிடியில் செருகினோம். நிஜ பேட் போலவே ஒரு தோற்றம் வந்தது.

மறுநாள் அதை விளையாடக் கொண்டு போனோம். நல்ல ஃபுல் டாஸ் பந்து வந்தது. ஓங்கி அடித்தேன். பந்தை முந்திக் கொண்டு பேட் என் கையை விட்டுப் பறந்து கொண்டிருந்தது. என் கையில் சைக்கிள் டியூப் மட்டும் இருக்கிறது. இதென்னடா புது சிக்கல். மூங்கில் மிகவும் வழுவழுப்பாக இருந்ததால் அது டியூபில் இருந்து வழுக்கிக்கொண்டு பறந்து விட்டது. மறுநாள் மூங்கிலுக்கும் வஜ்ஜிர நூல் சுற்றி க்ரிப் ஏற்படுத்தி அதன் மேல் சைக்கிள் டியூபை மீண்டும் செருகி ஒரு வழியாக பேட்டை உருவாக்கினோம். ஷாக் மிகுதியாக இருந்தாலும் நாங்கள் எங்களை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டோம். பந்தின் கதை இதைவிட இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

கிரிக்கெட் பந்து எப்பொழுதும் எங்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். கார்க் பால் அதற்கு ஒரு டூப்ளிகேட். கனமாகவும் இருக்கும்; கொஞ்சம் உழைக்கவும் செய்யும். நன்றாக ஸ்பின் ஆகும். காலில், கையில் பட்டால் பந்தை விட வீக்கம் பெரியதாக இருக்கும். ஆனால் அது ஈரோட்டில்தான் கிடைக்கும். பஸ் செலவு பந்தின் விலையை விட இரண்டு மடங்கு அதிகம். 

பேட்டை ஏலத்தில் எடுத்ததால் ஒரு கிழிந்த கிரிக்கெட் பந்து இனாமாகக் கிடைத்தது. அதை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் தந்து சுற்றித் தைக்கச் சொன்னோம். இருந்தாலும் அது அல்பாயுசில் முடிந்தது.

நான்தான் அந்தக் காலத்தில் அப்துல்கலாம். இத்துப் போன கிரிக்கெட் பந்தின் உட்புறம் ஆராய்ச்சி செய்ததில் அது ஒரு கடினமான பொருள் மீது சுற்றப்பட்ட சணல் நூல் உருண்டை என்பது தெரிய வந்தது.

ஒரு சிறிய சிவப்புக் கல்லை நல்ல பழைய துணியால் சுற்றி ஒரு சிறிய உருண்டையை உருவாக்கினேன். பேட்டுக்கு வாங்கியிருந்த சைக்கிள் டியூபில் மிச்சம் ஒரு மீட்டர் அளவு இருந்தது. அதை பிளேடால் (கத்தரிக்கோல் எங்களிடம் இல்லை)  வளையம் வளையமாக வெட்டினேன். அந்தக் துணி உருண்டை மேல் ஒவ்வொரு வளையமாக இழுத்து இழுத்துப் போட்டேன். கை நகத்தின் அடி தோலெல்லாம் பிசிறு பிசிறாக உரிந்து புள்ளி புள்ளியாக இரத்தம் தெரிந்தாலும் விளையாட்டு ஆர்வத்தில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட திருப்பதி லட்டு அளவில் பெரியதாக வந்தது.

தற்போது பந்தும் ரெடி. நான் இடக்கையில் ஸ்பின் போடுவேன். அந்த டியூப் பால் 90° அளவுக்கு எதிர்பாராத விதத்தில் திரும்புகிறது. பேட்ஸ்மேனுக்குத் தலை சுற்றியது. எங்கெங்கோ திரும்பி ஸ்டம்ப்பில் பட்டுவிடும். சமையலறையில் வந்த எலி போல் பந்து எங்கே போகுமென்று பௌலருக்கே தெரியாது.

ஒருவழியாக தப்பித் தவறி பேட் பந்தில் பட்டால் மேலிருக்கும் ஒரு வளையம் அறுந்து பந்துடன் அதுவும் வரும். ஒரு வேகத்தில் பார்க்க அதுவும் பந்து போலவே இருக்கும். ஃபீல்டருக்கு எதை கேட்ச் பிடிக்கவேண்டும் என்று குழப்பம். அவுட் செய்வதில் ஏகப்பட்ட பஞ்சாயத்து.

மீண்டும் பழைய கிரிக்கெட் பந்தின் உறையை மைதானத்தில் தேடி எடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் மன்றாடினால் எங்கள் பந்து அதற்குள் கொள்ளாத அளவு பெரிதாக இருந்தது. பத்து பதினைந்து வளையங்களைக் கழட்டி அதை உள்ளே வைத்து தைத்து இனிமேல் ரப்பர் வளையம் கழன்று வராமல் செய்தேன்.

இப்போதய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இவைகளைக் கேட்பதற்கு முன்பே வாங்கித் தருகிறார்கள். ஆனால் விளையாட மைதானம்தான் எங்கேயும் காணோம்.

Story Time - வயலும் வாழ்வும்

 வயலும் வாழ்வும்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : Eluthu

அம்மா, அம்மா ,நானும் பழனி மாமாவுடன் வயலுக்குப் போய் அங்கெல்லாம் பார்த்து விட்டு ஜாக்ரதையாக வரேன்மா" ரொம்ப கெஞ்சினேன். அனுமதி கிடைத்தது. சந்தோஷமாக அவர் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து நானும் வயலுக்குப் போனேன்.‌ மிகவும் இனிமையான காட்சி. கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப் பசேல் என்று நெல் வயல்கள் தழைத்து காற்றில் பட்டு வெல்வெட் போல மெதுமெதுவாக தலையாட்டிக் கொண்டிருந்தன. அருகில் தெளிந்த நீருடன் வாய்க்கால் அனைவரின் வயல்களுக்கும் பாசனம் அமைவதற்காக வளைந்து வளைந்து சென்றது. ஆங்காங்கே வாய்க்கால் ஓரம் ஆலும் அரசும்  குடை விரித்துப் பெரு நிழல் தந்தன. மெதுவாக வீசும் காற்றில் படபடத்த பழுத்த இலைகள் செய்யும் ஓசை நல்ல சூழலைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.

"பழனி மாமா, எனக்கு சூசூ வருது. பாத்ரூம் எங்கேயிருக்கு"  பெருங்கூச்சல் கொடுத்து கத்தினேன்.

அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. "அங்கேயே போடா! உனக்காக வயலில் பாத்ரூமெல்லாம் கட்ட முடியாது"

கொஞ்ச நேரம் ஆயிற்று. எனக்கு சற்றே போர் அடித்தது. நான் அப்போதுதான் சைக்கிள் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.  ஓட்டத்தெரியும். ஆனால் தானாக ஏறவும் தெரியாது;  இறங்கவும் தெரியாது. சைக்கிள் ஆரம்பத்தில் தனியாக ஓட்டுவதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். 

"பழனி மாமா நான் கொஞ்சம் சைக்கிள் ஓட்டட்டுமா?"

"சரிடா,பாத்து கீழே விழாமல் ஓட்டு"

அவருக்கு அப்போது பின்விளைவுகள் தெரியவில்லை.

சைக்கிளை (என் அப்போதைய உயரத்திற்கு அந்த சைக்கிள் உயரம் மிக அதிகம்). ஒரு பாறை ஓரம் அதைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி அதன் மேல் ஏறி குரங்குப் பெடல் போட்டு சைக்கிளை ஓட்டத் தொடங்கி விட்டேன். நான் சைக்கிளை ஓட்ட ஓட்ட ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி வீடு வரை வந்து விட்டேன். வயலுக்கும் வீட்டுக்கும் இடையே ஐந்து மைல். (கிமீ அப்போது இல்லை)

வீடு வந்ததும் சைக்கிளை விட்டு இறங்கத் தெரியாமல் அக்ரஹாரத்தின் எட்டு வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு வழியாக என்னை விட இளைப்பான ஒரு பெரியவர் போய்க் கொண்டிருந்தார். அவர் மீது ஓரளவு வேகத்தைக் குறைத்து மோதி கீழே விழுந்தேன். அவரும் விழுந்தார். எனக்கு கால் முட்டியில் சற்றே சிராய்ப்பு. அவர் சமாளித்து எழுந்து அவருக்கு உரிய சக்தியானுச்சாரம் என்னைத் திட்டினார். எனக்கு ஒன்றும் காதில் விழவேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கியதே எனக்குப் பேரானந்தம்.

பாவம்; பழனி மாமா. வயலில் இறங்கி வேலை செய்வதால் அவருக்கு இரண்டு கால்களிலும் காலாணித் தொல்லை உண்டு. வயலில் நாள் முழுவதும் வேலை பார்த்துக் களைத்து வீட்டுக்கு வரும் நேரம் அவருடைய சைக்கிள் இல்லாமல் போனதில் அவருக்கு ஏகப்பட்ட கோபம். மேலும் நான் எங்கே விழுந்து கிடக்கிறேனோ என்ற பயம் வேறு. 

நான் ரொம்ப சமர்த்தாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள சைக்கிளை ஓரம் நிறுத்தி விட்டு,உள்ளே போய் பாடப்புத்தகம் எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அகால நேரத்தில் பையன் சொல்லாமலே படிக்கிறானென்றால் ஏதோ குறும்பு செய்திருப்பான் என்று அம்மாக்களுக்குத் தெரியாதா?

ஆனால் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு உக்கிரமாக "எங்கே அந்த மூர்த்தி" என்று கத்திகொண்டே பழனி மாமா உள்ளே வந்தார். இதற்கும் மேல் என்ன நடந்தது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

Story Time - சித்திரகுள்ளனும் மர்மயோகியும் (பாகம் 1)

சித்திரகுள்ளனும் மர்மயோகியும் - (பாகம் 1)

திரு. கணேசன் ராமநாதன்


இந்த கதை சரித்திர கதையில்லை. இதை ஒரு நகைசுவை கதை என்றும் கூறமுடியாது. ஆனால் நகைசுவை இரண்டர கலந்த கதை. இது அறிவியல் கதை இல்லை. ஆனால் அறிவியல் சார்ந்த கதை.

" என்னை கூப்பிட்டீங்களாமே"

வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து அணைத்துவிட்டு தனது பார்வையை கீழிறக்கி அங்கு நின்றிருந்த அப்புவை வெறுப்புடன் பார்த்தான் பாஸ்கரன். ஆறடிக்கு மேல் உயரம். நல்ல தேக கட்டு. அமெரிக்காவில் பிறந்திருந்தால் அர்னால்ட் சுவாஷ்னேகருக்கு பதிலாக இவன் தான் ஹாலிவுட்டில் பிரபலமாயிருப்பான்.

" நேத்து மழைக்கு முளைச்ச காளான் நீ. அரை ஆழாக்கு உயரத்தில இருக்கிற உனக்கு காதல் ஒரு கேடு. சந்தியாகிட்ட போய் அவளை காதலிக்கறதா சொன்னியாமே. சந்தியா என்னோட ஆளு. உனக்கு என்ன தைரியம் இருந்தா அப்படி சொல்லியிருப்பே" என்று சொல்லிகொண்டே அப்புவை சட்டை காலரோடு தூக்கி வாயில் மீதியிருந்த சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டு அவனை கீழே தொப் என்று போட்டான்.

" அய்யோ அம்மா" என்று அலறிக் கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் நடுங்கி கொண்டு எழுந்தான் அப்பு. அப்பு மூணடி உயரத்தில் பாஸ்கரனின் சர்க்கஸ் கம்பெனியில் விதூஷகனாக வேலை பார்த்தான். முன்பொரு சமயம் பாஸ்கரன் அவனிடம் " குப்பை தொட்டில அனாதையா கிடந்த உன்னை எங்க அப்பா எடுத்து வளர்த்து இந்த சர்க்கஸ் கம்பெனில உனக்கு வாழ்க்கை தந்தார். அதை நினைப்பில வச்சுக்கிட்டு நடந்துக்க" என்று தனது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறான். அப்புவை சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு பிடிக்கும். அவன் செய்யும் சேட்டைகள் சிறுவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் வரவழைக்கும்.

பாஸ்கரன் சர்க்கஸில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பான். சர்க்கஸின் ரிங் மாஸ்டரும் அவன் தான். மிருகங்களுடன் பழகி பழகி அவனும் ஒரு மிருகமாக நடந்து கொள்வான். சந்தியா சர்க்கஸில் சேர்ந்த பிறகு அவனிடம் சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. சந்தியா கேரள நாட்டு அழகி. அரிதாரம் பூசி ஜிகினா உடையில் அவள் பார் விளையாடுவதை அனைவரும் கண் கொட்டாமல் பார்ப்பார்கள்.

நான் ஏன் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன் என்று விரக்தியாக வாழ்ந்து வந்தான் அப்பு. அபூர்வசகோதரர்கள் படத்தில் அவன் பெயரை கொண்டு அவனை மாதிரியே குள்ளனாக நடித்த கமல் காதல் தோல்வி அடைவதை பார்த்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறான் நம்ம அப்பு.
ஆனால், அப்புவை சந்தியாவின் அழகும் அவனிடம் அவள் காட்டிய அன்பும் காதல் என்ற மாய வலையில் வீழ்த்தியது.

" சந்தியா என்னோட ஆளு" என்று சொல்லி அவளிடம் தன் காதலை கூறியதை பாஸ்கரன் கண்டித்தது அவன் மனதை சுக்கு நூறாக்கியது.

" என்ன நான் சொன்னது காதில விழுந்ததா? சந்தியாவை மறந்துடு. உனக்கேத்த நண்டோ சிண்டோ வத்தலோ தொத்தலோ பாத்து காதலிச்சுக்கோ. இல்லைனா உன்னை உதைப்பேன். போ".

" சரிங்க அய்யா" னு சொல்லி தலையாட்டிவிட்டு அப்பு பாஸ்கரனின் கூடாரத்திலிருந்து வெளியே வந்து தனது கூடாரத்தை நோக்கி நடந்தான். அவன் மனம் வலித்தது. சந்தியாவின் சிரித்த முகம் கண்முன் வந்து அவனை வாட்டியது. வானொலியில் நேற்று அவன் கேட்ட பாடல் நினைவுக்கு வந்து அவன் சோகத்தை கூட்டியது. அவன் கேட்ட பாடல் இது தான்>

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய்
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதான் கண்ணே

அன்பே உயிரால் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உன்னை சேரும் நாளை தினமும் ஏங்கினேனே
நானிங்கு தனியாய் அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலே

நினைத்தாலே இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீ தான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலே

தொடரும்..

First published in Muthamilmandram

Cycle - A Small Story

 சைக்கிள்

திரு. நாராயணமூர்த்தி

ராலிஸ் சைக்கிள் அப்பொழுதெல்லாம் தரமான சைக்கிள் என்று பெயர் பெற்றது. ஐநூறு ரூபாய் சைக்கிளை பத்து மாதங்கள் உள்ள தவணையில் வாங்கிய நாட்கள். தெருவுக்குத் தெரு சைக்கிள் ரிப்பேர் கடை இருக்கும். சக்கரத்திற்குக் காற்றடிக்க ஐந்து பைசா. நாமே அடித்துக் கொண்டால் இலவசம். பங்க்சர் பார்க்க நாலணா. டயருக்குள் இருக்கும் ட்யூபைக் கழட்டி உப்புத்தாள் கொண்டு ஓட்டையைத் தேய்த்து ஒரு சொல்யூஷன் தடவி விட்டு விடுவார். நமக்கு பேப்பரை கோந்து போட்டு ஒட்டும் டெக்னிக்தான் தெரியும். கோந்து காய்ந்தால் பேப்பர் ஒட்டாது. ஆனால் இந்த சைக்கிள்காரருக்கு எல்லாம் தலைகீழ். அந்த சொல்யூஷன் காயவேண்டுமாம். அரை மணி தேசகாலம் ஆன பின் நாம் நம்பிக்கையை இழந்த நேரத்தில் பழைய டியூபில் ஒரு துண்டை அழகாக வட்டவடிவிலோ, அறுகோண வடிவிலோ கலை உணர்வுடன் வெட்டி அதையும் உப்புத்தாளில் தேய்த்து, அதற்கும் சொல்யூஷன் தடவி காயவிட்டு முன்பு காய்ந்த பசையின் மீது ஒட்டுவார். என்ன ஒரு மாயாஜாலம்! சும்மா பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும். காற்றடித்தால் ஒரு காற்றுக் குமிழ்கூட வராது. முதன் முதலில் நம் தர்க்கம் தோற்ற இடம் அது. 

வருடங்கள் செல்லச் செல்ல சைக்கிளின் மதிப்பு ஏறிக்கொண்டே போகும். "இது என் தாத்தாவின் சைக்கிள் என்று சொல்வதில் அத்தனை சந்தோஷம்". 

பொதுவில் நம்மை விட ஒரு அடி உயரத்தில் இருக்கும் சைக்கிளில்தான் நாம் அதைப் பழகியிருப்போம். கீழே விழுந்து முட்டிகளைப் பேத்துக்கொள்ளாத பயல்களே கிடையாது. அத்தனையும் வீரத்தழும்புகள். விழுந்தவுடன் நாம் பட்டுக்கொண்ட காயத்தைப் பார்ப்பதை விட சைக்கிளுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்றுதான் பார்ப்போம். பெரிதாக ஏதேனும் ஆகியிருந்தால் மறுநாள் சைக்கிள் கிடைக்காது என்ற பயம். 

ஒரு வாரம் சென்ற பின் ஓரளவுக்குத் தனியே ஓட்ட வந்துவிடும். ஏற,இறங்க, பிரேக் பிடிக்க இதெல்லாம் அட்வான்ஸ்டு லெவல். அதற்கும் மேலே இரு கைகளையும் ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து விட்டு பேலன்ஸ் செய்து திரும்புதல் PHD லெவல்.

ஸ்பிரிங் பெல்,பார்கவர், ராக்கெட் சீட்,கைப்பிடிகளுக்குக் குஞ்சலம்,டைனமோவுடன் லைட்,  "அன்பே வா சரோஜா தேவி" கணக்காக அதற்கு மஞ்சள் பஞ்சுத்துணியில் சுற்றி வைப்பது, இதெல்லாம் இருந்தால் பென்ஸ் கார் வைத்திருக்கும் முதலாளி மனோபாவம் வந்துவிடும்.

வேலை கிடைத்தவுடன் முதன் முதலில் வாங்கப்படும் பொருள் அனேகமாக எல்லாருக்கும் சைக்கிளாகத்தான் இருக்கும். பிறகுதான் நல்ல பேண்ட், சட்டைகள், ரேடியோ இத்யாதிகள்.

இப்போதெல்லாம் பிள்ளைகள் கீழே விழாமலே கற்றுக் கொள்ள ஒட்டுச் சக்கரங்கள் வைத்த சிறுவர் சைக்கிள்கள் வந்துவிட்டன. ஆண்பால் பெண்பால் வித்தியாசம் இல்லாமல் எந்த சைக்கிளுக்கும் பார் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த சைக்கிளையும் வாங்கலாம். இரட்டை லேடிபேர்டு சைக்கிளை எங்கேயும் காணோம்.

டியூப் பங்க்சர் ஆனாலோ,காற்று குறைந்தாலோ அதை சரி செய்ய பட்டணத்தில் ஆட்கள் இல்லை. வாங்கி ஒரே மாதத்தில் ஒட்டடை அடைந்து அனைவர் வீட்டிலும் இருக்கும் வேக்குவம்க்ளீனர் போல ஒரு மூலையில் தேமே என்று நிற்கும். கேட்பாரில்லை. 

சைக்கிளைப் போல எழுச்சியும் வீழ்ச்சியும் மன்னர்கள் கூட அடைந்திருக்க மாட்டார்கள்.

Contact Us

Address

No 323/1B, Opp Kendriya Vidyalaya, Near Sulur Airforce Station, Kangeyampalayam, Trichy Road, Sulur, Tamil Nadu 641 401, India

Phone

+91 422 428 5555